முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துத்துவா அனைவரையும் ஒன்றாக இணைக்கிறது: ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு

புதன்கிழமை, 29 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

இந்துத்துவா எனும் சித்தாந்த முறை அனைவரையும் அழைத்துச் செல்கிறது, ஒன்றாக இணைக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு 3 நாட்கள் பயணமாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வந்திருந்தார். சூரத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பாகவத் பேசியதாவது., ''இந்துத்துவா எனும் சித்தாந்த முறை ஒவ்வொருவரையும் அழைத்துச் செல்கிறது, ஒன்றாக இணைக்கிறது. அனைவரையும் தனக்குள் இணைத்து, அனைவரையும் செழிப்பாக்குகிறது. சில நேரங்களில் எழும் கருத்து முரண்பாடுகளையும் இந்துத்துவா அகற்றுகிறது. ஆனால், இந்துத்துவா என்பது முரண்பாடானது அல்ல.

இதை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், தடைகளை அகற்றுவதற்கு தேவையான சக்தி பற்றியும் இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இதைத்தான் உலகம் புரிந்துகொள்கிறது. நாம் சக்தி வாய்ந்தவர்களாக உருவாக வேண்டும். ஆனால், அந்த சக்தி கொடுங்கோன்மையை ஒருபோதும் குறிக்காது. இது மதத்தைப் பாதுகாக்கும் போது உலகை ஒன்றிணைக்கும். தனிநபர்கள் சேர்ந்த சமூகம் பொதுவான கலாச்சாரம் மற்றும் நோக்கங்களில் இணைக்கப்படுவதுதான் தேசம்”.

 

இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து