Idhayam Matrimony

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபீஸ் ஊசி செலுத்திய டாக்டர், செவிலியர் பணி இடைநீக்கம்

புதன்கிழமை, 29 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

தானே அருகே கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபீஸ் ஊசி செலுத்திய டாக்டர் மற்றும் செவிலியர் பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.

மராட்டிய மாநிலம் தானே அருகே கல்வா அட்கோன்னேஷ்வர் நகர் பகுதியில் ராஜ்குமார் யாதவ் என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அங்குள்ள ஒரு சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த டாக்டர் ராக்கி தாவ்டே மற்றும் நர்சு கீர்த்தி ராயத் ஆகியோர் அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

பின்னர் ஊசி மருந்து பாட்டிலை கவனித்தபோது, அது கொரோனாவிற்கான தடுப்பூசி இல்லை என்பதும், ரேபீஸ்  வெறிநாய்கடிக்காக செலுத்தப்படும் ஊசி மருந்து என்பதும் தெரியவந்தது. இது குறித்து ராஜ்குமார் தானே மாநகராட்சியில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இதற்கு காரணமாக இருந்த டாக்டர் ராக்கி தாவ்டே மற்றும் நர்சு கீர்த்தி ஆகிய 2 பேரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்தனர்.

 

இவர்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து