முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை அக்டோபர் 31 வரை நீட்டிப்பு

புதன்கிழமை, 29 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்காக விதிக்கப்பட்டுள்ள தடையை  அக்- 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.  நடப்பாண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவியதைத் தொடர்ந்து சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. 

 

இந்நிலையில் தற்போது வரும் அக்-31 வரை தடை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.எனினும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ‘ஏர் பபுள்’ விதிகளின் அடிப்படையில் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் குறிப்பிட்ட சில மார்க்கங்களில் மட்டும் விமானங்கள் செல்லும் எனத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து