முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் மீண்டும் உயர்ந்த 'கொரோனா'புதிதாக 23,529 பேருக்கு தொற்று

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

 

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வந்தது. இதன்படி செவ்வாய் கிழமை 18,795 பேருக்கும், புதன் கிழமை 18,870 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், நேற்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,529 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 ஆயிரத்து 529 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 12,161 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,37,39,980 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,48,062 ஆக உயர்ந்துள்ளது. 

இதன்மூலம் உயிரிழப்போர் விகிதம்1.33 % ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 28,718  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,30,14,898 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.83 % ஆக உள்ளது. மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,77,020 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய ஒரே நாளில் 15,06,254 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 56,89,56,439  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து