முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று : மத்திய சுகாதாரத்துறை தகவல்

சனிக்கிழமை, 2 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது,கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 24 ஆயிரத்து 354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 37 லட்சத்து 91 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 73ஆயிரத்து 889 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 0.81 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 197 நாட்களில் இல்லாத அளவு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1,335 பேர் குறைந்துள்ளனர்.

கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 30 லட்சத்து 68 ஆயிரத்து 599 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.86ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை இந்த அளவுக்கு குறைந்தது இதுதான் முதல்முறையாகும். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 234 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 48 ஆயிரத்து 573ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை ஏறக்குறைய 57.19 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, இதில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 14 லட்சத்து 29 ஆயிரத்து 258 பேருக்கு பரிசோதனை செய்யப்ப்டது. 89.74 கோடி பேருக்கும் அதிகமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து