முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குல் நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது 10க்கும் அதிகமான ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி விரட்டினர். தொடர்ந்து  வானத்தில் சிவப்பு பட்டாசுகளை வெடித்து எச்சரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மீனவர்கள் கரை திரும்பினர்.

 

மீனவர்கள் மீது பாட்டில்களை வீசி இலங்கை கடற்படைதாக்குல் நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் படகுகளில் உடைந்து கிடந்த கண்ணாடித் துண்டுகள், பாட்டில்களையும் காட்டினர். இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலால், மீன் பிடிக்க முடியாமல் நஷ்டத்துடன் கரை திரும்பியதாகவும் மீனவர்கள் கூறி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து