முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ.-வாக பதவி ஏற்றுக்கொண்டார்: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

பவானிபூர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.

மேற்கு வங்காளத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. என்றாலும், மம்தா பானர்ஜி நந்தி கிராமம் தொகுதியில் சுவேந்து அதிகாரிக்கு எதிராக தோல்வியடைந்தார். இருந்தாலும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதனால் ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் பவானிபூர் இடைத்தேர்தல் கடந்த 30-ந்தேதி நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். கடந்த 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பா.ஜனதா வேட்பாளர் பிரியங்காவை 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோற்கடித்தார். வெற்றி பெற்ற மம்தா 7-ம் தேதி (நேற்று) சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

 

அதன்படி, நேற்று மம்தா பானர்ஜி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட மேலும் இருவரும் பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்பு விழாவில் அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கார் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து