முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

\உலக அளவில் மாதம் ஒன்றுக்கு 150 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி உலக சுகாதார அமைப்பு தகவல்

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

 

ஜெனீவா : உலக அளவில் மாதம் ஒன்றுக்கு 150 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதன் மூலம் ஒவ்வொரு நாட்டிலும் 40 சதவீத மக்களுக்கு ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் வெளியிட்டுள்ள செய்தியில், நடப்பு ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் 40 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். இதேபோன்று, வருகிற 2022ம் ஆண்டு மத்தியில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

இந்த இலக்குகளை எட்டுவதற்கு 1,100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.  உலக அளவில் மாதம் ஒன்றுக்கு 150 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  இதனால், நம்முடைய இலக்குகளை அடைவதற்கு தேவையான வினியோகம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து