முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ. செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் - வருண் காந்தி கருத்து

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நிகழ்ந்த விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக கடுமையான விமர்சனங்களுடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தியின் பெயர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் இல்லை.

தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள வருண் காந்தி "கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய செயற்குழுவில் ஒரு கூட்டத்திலும் நான் கலந்து கொண்டதில்லை; நான் அதில் உறுப்பினராக இருந்ததாக நினைக்கவில்லை," என்தெரிவித்துள்ளார். 41 வயதாகும் வருண்காந்தி 17 ஆண்டு காலமாக பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் வருண் காந்தி, அவரது தாய் மேனகா காந்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் சாமி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து