எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கோதாவரி-காவிரி இணைப்பு திட்ட அறிக்கைக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று ஆந்திரா-தெலுங்கானா அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும், காவிரி, கோதாவரியை இணைத்தால் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வரை தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு நதிகள் இணைப்பு திட்டத்தில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அமைத்துள்ள சிறப்பு குழுவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு கோதாவரி (ஈச்சம்பள்ளி, ஜனம்பேட்டை-காவிரி (கல்லணை) ) இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அனுப்பி வைத்தது. அதன் மீதான கருத்துக்களையும் கேட்டது.
தமிழ்நாடு நீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ளதால் கூடுதல் நீரை வழங்கவும் ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் இருந்து இணைப்பு கால்வாய் உயர்மட்டத்தில் அமைக்கப்பட்டு காவிரியில் கல்லணைக்கு பதிலாக கட்டளை கதவணையில் சேரும் வகையில் இணைக்கப்பட்டால் மிக தேவை உள்ள இடங்களுக்கு தண்ணீரை வழங்கவும், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாயில் தண்ணீரை எடுத்து செல்லவும் ஏதுவாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசு கோதாவரி- கிருஷ்ணா, பெண்ணாறு-காவிரி இணைப்பின் விரிவான திட்ட அறிக்கையை மீதான கருத்துக்களை ஏற்கனவே தேசிய நீர் மேம்பாட்டு முகமை தலைமை இயக்குனருக்கு அனுப்பி வைத்தது. அதில் முக்கியமாக இந்த இணைப்பு கால்வாயை தமிழ்நாட்டில் உயர்மட்டத்தில் அமைத்து கல்லணைக்கு பதிலாக கட்டளைகதவணையில் இணைக்குமாறு கோரப்பட்டு இருந்தது. தேசிய நீர் மேம்பாட்டு முகமை இந்த விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து இதில் தொடர்புடைய அனைத்து மாநிலங்களின் கருத்துக்களுடன் அனுப்பி உள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை பரிசீலனையில் இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தபோது கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் தமிழக அரசின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை மனு கொடுத்திருந்தார். அதேபோல் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த ஜூலை மாதம் மத்திய ஜல்சக்தி துறை மந்திரியை கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்து இந்த திட்டத்துக்கு விரைவில் மற்ற மாநிலங்களின் ஒப்புதலை பெற்று விரைந்து செயல்படுத்த மனு கொடுத்தார்.
இந்த நிலையில் இந்த திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் கருணாநிதி முதல்வராக இருக்கும்போதே முதல் கட்ட பணிகள் கரூர் மாவட்டம் மாயனூரில் தடுப்பணை கட்டி தொடங்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இணைப்பு திட்டம் தொடரவில்லை. மாயனூர் தடுப்பணையில் இருந்து கால்வாய் வெட்டி திருச்சி, கரூர் மாவட்டங்களுக்கு கட்டளைகால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
இப்போது அந்த கால்வாய் மீண்டும் தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்படுகிறது. இந்த திட்டத்தின் 2-ம் பகுதியாக கட்டளை கால்வாயில் இருந்து புதுக்கோட்டை வரை கால்வாயை கொண்டு செல்லும் பணி கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அடுத்த கட்டமாக புதுக்கோட்டையில் இருந்து குண்டாறு வரை கால்வாயை இணைக்கவும் அதன் பிறகு ராமநாதபுரம் வரை கொண்டு செல்லவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
காவிரி, கோதாவரியை இணைத்தால் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வரை தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். 250 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம். எனவே காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.