முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி ஆட்சியில் தலித்துகள், ஏழைகளுக்கு நீதி கிடைக்காது : பிரியாங்கா காந்தி ஆவேசம்

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : சாமானிய மக்கள், ஏழைகள், தலித்துகள், பெண்களுக்கு நீதி கிடைக்காது. இதுதான் மக்களுக்குச் செல்லும் செய்தியா என்று நரேந்திர மோடியிடம் கேட்க விரும்புகிறேன், என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவாவை உ.பி. அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “லக்கிம்பூர் கெரி கலவரத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் மிஸ்ரா இன்னும் பதவி விலகவில்லை. பதவி நீக்கமும் செய்யப்படவில்லை. இதன் மூலம் மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்கும் செய்தி என்பது, அதிகாரத்தில் இருப்போர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அமைச்சராக இருந்தாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதாகும்.

யாரேனும் ஒருவர் அதிகாரத்தில் இருந்தால், அமைச்சரோ அல்லது பா.ஜ.க தலைவரோ அவரால் எதுவேண்டுமானாலும் செய்யமுடியும். சாமானிய மக்கள், ஏழைகள், தலித்துகள், பெண்களுக்கு நீதி கிடைக்காது. இதுதான் மக்களுக்குச் செல்லும் செய்தியா என்று நரேந்திர மோடியிடம் கூற விரும்புகிறேன்.

நாங்கள் இங்கு திருடர்கள் போல் வந்தோம். ஒருவர் தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்தது குற்றமா? இன்னும் மிஸ்ரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஆனால், சட்டம் - ஒழுங்கு அடிப்படையில் நாட்டிலேயே உ.பி.தான் நம்பர் ஒன் மாநிலம் என்று கூறுகிறார்கள். சட்டமும் ஒழுங்கும் எங்கிருக்கிறது?'' என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து