எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசுக்கு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தொழிற்சாலை மின் நுகர்வு அதிகரிப்பு, தொடர் மழையால் நிலக்கரி சுரங்கம் மூடல், இறக்குமதி நிலக்கரி விலை அதிகரிப்பு, இருப்பு வைப்பதில் குளறுபடி போன்ற காரணங்களால் பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது,
மாநில முதல்வர்கள் கோரிக்கை
இதையடுத்து நிலக்கரி ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசுக்கு பல மாநில முதல்வர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை கடுமையாக இருப்பதால் நாட்டின் பல மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் போன்ற ஆறு மாநிலங்களில் மின்விநியோகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் தலையீடு செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கடிதம் எழுதினர்.
இந்நிலையில், மின் நெருக்கடியைச் சமாளிக்க மாநிலங்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி நிலக்கரி விநியோகத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் மத்தியஅரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், ‘தலைநகர் டெல்லியில் கடந்த மூன்று மாதங்களாகவே நிலக்கரி பற்றாக்குறை இருந்து வருகிறது. நிலக்கரி விநியோகம் தடைபட்டுள்ளதால் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். உடனடியாக நீங்கள் இது விஷயத்தில் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நிலக்கரி பற்றாக்குறையால் பல மாநிலங்கள் தவித்து வரும் நிலையில் ஒரு சில நாட்களில் உத்தரபிரதேசத்தில் மின் விநியோக நெருக்கடி மோசமாக இருக்கும் எனத் தெரிகிறது.
ஆனால், நிலக்கரி சப்ளை விரைவில் சீராக்கப்படும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு மத்திய எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். பீகார் எதிர்கட்சி தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட அறிக்கையில் பீகார் மாநிலத்தில் மின் விநியோக பாதிப்பு ஏற்படவுள்ளது. ஏற்கனவே மின் கட்டணம் அதிகமாக இருந்தபோதிலும், மாநில அரசின் நிர்வாக தோல்வியால் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் நிலக்கரி இருப்பு பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் மின் விநியோகம் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. அனல் மின் நிலையங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு 20 நிலக்கரி ரேக்குகளை கூடுதலாக அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில், ராஜஸ்தானில் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கங்களில் மழைநீர் புகுந்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால், வரும் ஓரிரு நாளில் அனல் மின் நிலையத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு பெங்களூரு திரும்பினார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து, கர்நாடகத்திற்கு எந்த விதமான பற்றாக்குறையும் இன்றி நிலக்கரி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் என்றார்.
நான்கு காரணங்கள்
இந்நிலையில், நிலக்கரி பற்றாக்குறைக்கான நான்கு காரணங்களை மத்திய மின்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அதில், நாட்டில் நிலக்கரி இருப்பு குறைந்து வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய நிலக்கரி அமைச்சகம் தலைமையிலான துணைக் குழு வாரத்திற்கு இரண்டு முறை, நிலக்கரி இருப்பு நிலைமையை கண்காணித்து வருகிறது.
கொரோனா ஊரடங்குகிற்கு பின்னர் தொழிற்சாலை உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்து வருவதால் மின்சாரம் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் முதல் நிலக்கரி சுரங்க பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நிலக்கரி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி நிலக்கரியின் விலை அதிகரிப்பால் இறக்குமதி நிலக்கரி சார்ந்த மின் உற்பத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக போதுமான அளவு நிலக்கரி இருப்புகளை வைத்திருக்காததால், தற்போது நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் தினசரி மின்சார நுகர்வு ஒரு நாளைக்கு 4 பில்லியன் யூனிட்களைத் தாண்டியுள்ளது. 65 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மின் தேவையை நிலக்கரி மூலமே கிடைக்கிறது. அதனால், நிலக்கரியை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் காலத்திற்கான மின் நுகர்வு 106.6 பில்லியன் யூனிட்டாகவும், அதே தற்போதைய காலகட்டத்தில் 124.2 பில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ளதால், அதனை முறைப்படுத்துவதற்காக நிர்வாகக் குழு ஒன்றை மத்திய மின்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. அதன் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. தினசரி நிலக்கரி இருப்புகளை கண்காணித்தல், மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்துதல், இந்திய ரயில்வேயுடன் இணைந்து சப்ளையை உறுதி செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிலக்கரி இந்தியா லிமிடெட் (சி.ஐ.எல்.) மூலம் வரும் நாட்களில் நாளொன்றுக்கு 1.6 எம்.டி. அளவிற்கு நிலக்கரி சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.