முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது

ஞாயிற்றுக்கிழமை, 10 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 208 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 18,166 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் புதிதாக 18ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 39 லட்சத்து 53 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30ஆயிரத்து 971 ஆகக் குறைந்துவிட்டது. கடந்த 208 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரில் 5,672 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 32 லட்சத்து 71ஆயிரத்து 915 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 0.68 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் மிகக் குறைவாகும். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 97.99 சதவீதமாக உயர்ந்துள்ளனர். தொடர்ந்து 16-வது நாளாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 12 லட்சத்து 83 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 58 கோடியே 25 லட்சத்து 95 ஆயிரத்து 693 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் 214 பேர் உயிரிழந்தனர், ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 50 ஆயிரத்து 589 ஆகக் அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 94.70 கோடியைக் கடந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து