முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

இந்தாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் கார்ட் , ஜோஷ்வா டி.ஆங்றிஸ்ட் மற்றும் கய்டோ டபுள்யு இம்பென்ஸ், ஆகியோர் நோபல் பரிசுக்கு தேர்வானதாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர்கள் தொடர்பான பகுப்பாய்விற்காக டேவிட் கார்டுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்தது.

 

மேலும் பொருளாதாரத்தில் உள்ள காரண உறவுகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்விற்காக ஜோஷ்வா டி.ஆங்றிஸ்ட், கய்டோ டபுள்யு இம்பென்ஸ் நோபல் பரிசிற்கு தேர்வாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து