Idhayam Matrimony

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டி.எம்.சி காவிரி நீரை வழங்க கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியுள்ளது. 

காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழுவின் 53வது ஆலோசனை கூட்டம் புதுடெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழகம் சார்பில் கலந்துகொண்ட பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தற்போது வரை நிலுவையிலுள்ள 25.84 டி.எம்.சி நீரையும் இம்மாதத்தற்கான 14 டி.எம்.சி நீரையும் வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். அதனடிப்படையில் கர்நாடக அரசு மொத்தமாக 40 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து