முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீர் சோபியானில் பாதுகாப்புப்படை என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த வாரம் மருந்துக் கடை உரிமையாளர், சாலையோர வியாபாரி, டாக்ஸி ஓட்டுநர் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் உட்பட 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் நான்கைந்து தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியதாக உளவுத் துறை தகவல் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பூஞ்ச், ரஜோரி, சோபியான், அனந்த்நாக், பந்திப்போரா ஆகிய மாவட்டங்களில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்த நிலையில் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து