முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தான் மசூதியில் மீண்டும் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி - பலர் படுகாயம்

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் நேற்று தொழுகையின் போது ஷியா மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 13 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அங்குள்ள இமான் பர்கா மசூதியில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து வரும் படங்களில் சிதைந்த ஜன்னல் பாகங்கள் மற்றும் உடல்கள் தரையில் கிடப்பதை பார்க்க முடிகிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இது ஒரு தற்கொலை குண்டு தாக்குதலார இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காயம் அடைந்த வழிபாட்டாளர்கள் மிர்வைஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக உள்ளூர் மருத்துவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அரசு தரப்பிலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டூஸ் மாகாணத்தில் ஒரு ஷியா மசூதியை தற்கொலை குண்டுதாரி இலக்கு வைத்ததில் கிட்டத்தட்ட ஐம்பது பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு கந்தஹாரில் ஷியா மசூதி அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து