முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 கோடியாவது தடுப்பூசியை கொண்டாட மத்திய அரசு முடிவு

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : 100 கோடியாவது தடுப்பூசி என்ற இலக்கை எட்டியதும், அதனை விமரிசையாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 97 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 73 விழுக்காடு மக்கள் முதல் டோசையும், 30 விழுக்காடு மக்கள் இரண்டாம் டோசையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 100 கோடியாவது தடுப்பூசி என்ற இலக்கு 3 அல்லது 4 நாட்களில் எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த இலக்கை எட்டியதும் விமானங்கள், ரயில்கள், கப்பல்கள், மெட்ரோ ரயில்களில் மற்றும் ரயில்நிலையங்களில் அறிவிப்பு செய்யப்படும் என்றும் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து