முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் புதிதாக மேலும் 16,862 பேருக்கு கொரோனா

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 379 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19,391 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் புதிதாக மேலும் 16,862 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,391 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 379 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 3,40,37,592 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,33,82,100 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4,51,814 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவில் தற்போது 2,03,678 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 30,26,483 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை 97,14,38,553 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் மட்டும் 9,246 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 96 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து