முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி: மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துள்ளேன்: சசிகலா பேட்டி

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்து இருக்கிறேன் என்று சசிகலா கூறினார்.

எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க. தனது பொன்விழா ஆண்டில் இன்று காலடி எடுத்து வைக்க உள்ளது. இந்தநிலையில் சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா நேற்று சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தில்  மலர் தூவி கண்ணீர் செல்க மரியாதை செலுத்தினர். 

சசிகலா வருகையால் அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் திரண்டனர்.  முன்னதாக, வழக்கம் போல அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா வருகை தந்தது  குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்து வந்த பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது இதுவே முதல் தடவையாகும். 

ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன். அ.தி.மு.கவையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன். ஜெயலலிதா நினைவிடத்திற்கு நான் வந்ததற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தனர்” என்றார், 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து