முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயபாஸ்கர் இல்லத்தில் ரெய்டு ஒரு பழிவாங்கும் நடவடிக்கை: ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். கண்டனம்

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும், அவரது உறவினர்கள் வாழும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது கண்டனத்துக்குரியது என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகியோர் அறிக்கைவிடுத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும், அவரது உறவினர்கள் வாழும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் தி.மு.க. அரசு, தனது பழிவாங்கும் உனர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியைத் தேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

அ.தி.மு.க.பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில் தலைநகர் சென்னையிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமான விழாக்களைக் கண்டு மனம் பொறுக்க முடியாத தி.மு.க., விடிந்தவுடன் காவல் துறையை எளிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத் தாண்டவம்ஆடிக்கொண்டிருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம். இந்த இயக்கம் தி.மு.க.-வின் முயற்சிகளால் முடங்கிடவோ, முடியாமற்போகவோ, ஓய்ந்து, சாயப்போவது இல்லை. எத்தனை கழக நிர்வாகிகள் மீது என்ன வழக்குகள் போட்டாலும், அவதூறுபரப்பினாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்காலத்தில்அடையப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்தியிட முடியாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து