முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துரை வைகோவுக்கு கட்சிப் பதவி; ம.தி.மு.க.வில் இருந்து மாநில இளைஞரணி செயலாளர் விலகுவதாக அறிவிப்பு

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

துரை வைகோவுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டுள்ள சூழலில், ம.தி.மு.க.வில் இருந்து மாநில இளைஞரணி செயலாளர் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ம.தி.மு.க.வின் மாவட்டச் செயலர்கள், உயர்நிலை, ஆட்சிமன்றம், அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டார். வாரிசு அரசியலை எதிர்த்து, தான் சார்ந்து இருந்த தி.மு.க.வில் இருந்து விலகி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து ம.தி.மு.க.வை தொடங்கிய வைகோ, தற்போது வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்ளும் வகையில், அவரது மகன் துரை வைகோவுக்கு கட்சி பதவியை வழங்கியுள்ளார் என குற்றச்சாட்டு குரல்கள் எழுந்துள்ளன.

அதேசமயம் வாரிசு அரசியல் என்பது ஒருவரை கொண்டு போய் திணிப்பது. ஆனால், துரை வைகோவுக்கு தொண்டர்களின் விருப்பப்படியே வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பில் 106 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே, அவருக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டுள்ளது என, வைகோ தரப்பில் விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.

வைகோ தனது மகனுக்கு கட்சிப் பதவியை வழங்கியதை, பொறுப்பில் உள்ள நிர்வாகிகளில் பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டாலும், அடிமட்டத்தில் உள்ள கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா?, இவ்விவகாரம் தொடர்பாக அவர்களது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது பின்னரே தெரியவரும். இதற்கிடையே, துரை வைகோவுக்கு கட்சிப் பதவி வழங்கியதற்கு முதல் முதலாக மாநில நிர்வாகியிடம் இருந்தே எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் வே.ஈஸ்வரன். இவர், ம.தி.மு.க. மாநில இளைஞரணி செயலராக உள்ளார். அரசியல் கட்சி போராட்டங்களைத் தவிர, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், சுற்றுச்சூழலுக்கு ஆதரவாகவும், சமூகநலனுக்கு ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.

 

ம.தி.மு.க. மட்டுமின்றி, பல்வேறு கட்சியிலும் அவருக்கு நன்கு அறிமுகம் உள்ளது. தொண்டர்களிடமும் நன்கு அறிமுகம் உள்ளவர் வே.ஈஸ்வரன். ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் வே.ஈஸ்வரன் கலந்து கொள்ளாத சூழலில், துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டதையும், அடுத்த அரசியல் தலைவர் என்று சுட்டிக் காட்டப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க.வில் இருந்த விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து