முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்யன்கானின் நீதிமன்றக் காவல் அக்.30-ம் தேதி வரை நீட்டிப்பு

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைதாகி சிறையிலிருக்கும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆா்யன்கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 3-ந்தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சாதாரண பயணிகள் போல சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, போதை விருந்து நடத்தியதாக பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் அர்பாஸ் மெர்சந்த், மாடல் அழகி முன்முன் தமேச்சா உள்ளிட்டவர்களும் சிக்கினர். இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைதாகி உள்ளனர்.

இதில் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சந்த், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நிராகரித்து உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் போதைப்பொருள் தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பாட்டீல் முன்னிலையில் நடந்தது. பிறகு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீது தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் ஆர்யன் கான் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

 

2 கோர்ட்டுகளில் ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில் ஆர்யன் கான் தரப்பு மும்பை ஐகோர்ட்டில் முறையிட்டு உள்ளது. இது அக்டோபர் 26-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் போதைப் பொருள் வழக்கில் கைதான ஆா்யன்கானின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 30-ம் தேதி வரை நீட்டித்து மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து