முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு பண்டிகை காலங்களில் அதிகரிக்க கூடும்; மருத்துவர்கள் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : கொரோனா பாதிப்பு பண்டிகை காலங்களில் அதிகரிக்க கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 846 ஆக உள்ளது.  12 பேர் உயிரிழந்து உள்ளனர் என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள மருத்துவமனையின் இயக்குனர் சுப்ரஜோதி பவ்மிக் கூறியபோது, பண்டிகை காலம் இன்னும் முடியவில்லை.  இதுபோன்று தொடருமெனில், கடந்த 2020-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் காலங்களில் இருந்த நிலைமைக்கு திரும்பி செல்ல நேரிடும் என நாங்கள் நினைக்கிறோம்.

பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளை எடுத்து கொண்டால் பாதிப்பு வராது என அர்த்தமல்ல.  அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  பாதிப்பு விகிதம் அதிகரித்து இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.  ஆனால், சிகிச்சைக்கு சேருவோர் குறைவாக உள்ளனர் என கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கண்டறியப்பட்டால் இரவு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து