எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மாநில அளவிலான புதிய கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றினால் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம், கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் முதல் கூடுதல் பதிவாளர் நிலை வரை உள்ள அரசு அலுவலர்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் இதர துறை அலுவலர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் வகையில், மாநில அளவிலான கூட்டுறவுப் பயிற்சி நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்று அ.தி.மு.க. அரசு 110 விதியின் கீழ் அறிவிப்பு செய்தது.
அதன்படி, மாநிலம் முழுவதும் பல இடங்களை ஆய்வு செய்து, சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், மஞ்சகுட்டை ஊராட்சி, செம்மடுவு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம், மாநில அளவிலான புதிய கூட்டுறவுப் பயிற்சி நிலையம் ஒன்றை சுமார் 61.80 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க 24.12.2020 அன்று கூட்டுறவுத் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.
முதற்கட்டமாக 39.60 லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூலம் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து பயிற்சி நிலையம் கட்டுவதற்கு 2020- 21ஆம் ஆண்டுக்கான முதல் தவணையாக 25 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, பொதுப்பணித் துறை மூலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் கூட்டுறவுத் துறை பதிவாளர் பொதுப்பணித் துறை நிர்வாகப் பொறியாளருக்கு 28.7.2021 அன்று எழுதிய கடிதத்தில், மறு உத்தரவு வரும் வரை கட்டிடப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இக்கடிதத்தினை அடிப்படையாகக் கொண்டு, பொதுப்பணித் துறை சேலம் நிர்வாகப் பொறியாளர், மாநிலக் கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தின் கட்டிடப் பணிகளுக்கான செலவினங்களுக்காக ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அனைத்துவிதமான கட்டுமானப் பணிகளையும் மறு உத்தரவு வரும்வரை தொடரக்கூடாது என்றும், 2.8.2021 அன்று அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகளுக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளார்.
ஏற்கெனவே அ.தி.மு.க. அரசால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வரும் பல மக்கள் நலத் திட்டங்களான, அம்மா இருசக்கர வாகனம், அம்மா குடிநீர் போன்றவற்றை முழுமையாக நிறுத்தியும்; அம்மா உணவகத்தில் உணவு வகைகளையும், எண்ணிக்கையையும் குறைத்தும்; தாலிக்குத் தங்கம் திட்டத்தின் பயனாளிகளுக்குப் புதுப் புது நிபந்தனைகள் விதித்தும், இதுபோன்ற நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்பட முடியாமல் செய்து வருகிறது இந்த தி.மு.க. அரசு.
மேலும், நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளைத் தமிழக மக்களிடம் அளித்து, பின்புற வாசல் வழியாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் இந்த தி.மு.க. அரசு, தற்போது அ.தி.மு.க. அரசால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ்நாட்டின் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோர் ஒரே இடத்தில் உயர்தரப் பயிற்சி பெற அமைக்கப்பட்டு வரும் மாநிலக் கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை, சேலம் மாவட்டம் ஏற்காட்டிலிருந்து, கொடைக்கானலுக்கு மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.
அ.தி.மு.க. அரசு ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும்போதே, அந்தத் திட்டத்தினால் ஏற்படும் பயன் என்ன, அத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் அந்த ஊராட்சி/ நகரம் மற்றும் அப்பகுதி வாழ் மக்களுக்கு என்னென்ன பயன் ஏற்படும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், தீர ஆலோசித்துச் செயல்படும்.
ஏற்கெனவே ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்கள் சுற்றுலாத் துறையில் பெயா் பெற்றவை. மேலும் அந்த இடங்களில் பயிற்சி நிலையங்கள், பல்கலைக்கழகம் போன்றவை நடைபெற்று வருவதைக் கருத்தில் கொண்டும், சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஏற்காடு, கொல்லிமலை, கல்வராயன்மலை போன்ற மலைப் பகுதிகளில் அதிக அளவில் வசித்துவரும் மலைவாழ் மக்கள் அதிக அளவு வருவாய் ஈட்டும் வகையில் இந்த மாநில அளவிலான கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை ஏற்காட்டில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டது.
இப்படித் திட்டமிட்டு, இப்பகுதி மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், சுற்றுலா வளர்ச்சிக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட, மாநில அளவிலான இப்பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு இந்த அரசு திட்டமிடுவதை அறிந்து, ஏற்காடு, ஆத்தூர் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்னையில், தலைமைச் செயலாளரிடம் இப்பயிற்சி நிலையம் தொடர்ந்து ஏற்காட்டிலேயே செயல்பட வேண்டும் என்று நேரடியாக மனு அளித்துள்ளனர். தலைமைச் செயலாளர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்.
ஆனால், எதிலும் அரசியல் செய்யும் தி.மு.க. அரசு, இதிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 20 சதவீதம் முடிவடைந்த நிலையில், இப்பயிற்சி நிலையத்தை ஏற்காட்டில் இருந்து கொடைக்கானலுக்கு மாற்ற உள்ளதை அறிந்து, இப்பகுதி மலைவாழ் மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, மாநிலக் கூட்டுறவுப் பயிற்சி நிலையம் தொடர்ந்து ஏற்காட்டிலேயே இருந்திட வேண்டும் என்றும்; நிறுத்தப்பட்டிருக்கும் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
மாநிலக் கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்தால், அதை எதிர்த்து இப்பகுதி மலைவாழ் மக்கள், சேலம் மாவட்ட மக்கள் ஆகியோருடன், சேலம் மாவட்ட அ.தி.மு.க.வும் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தும் என்று, சேலம் மாவட்ட மக்களின் சார்பாக, இந்த தி.மு.க. அரசிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காமி விமர்சனம்
18 Mar 2024நாயகன் விஷ்வக் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேர
-
காடுவெட்டி விமர்சனம்
18 Mar 2024கதையின் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதல் தொல்லை கொடுக்கும்
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ரோமியோ இசை வெளியீடு
18 Mar 2024அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.
-
அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
பிரேமலு விமர்சனம்
18 Mar 2024கல்லூரியில் படிக்கும் நாயகன் சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார்.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வரும் 21-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவலையும் வெளியிட வேண்டும்: எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்.பி.ஐ.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது?
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானதாகவும், நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
கா இசை வெளியீடு
18 Mar 2024நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, தற்போது நடித்து வரும் 'கா' படத்தில் வனவிலங்கு புகைப்பட கலைஞராக நடித்து வரும் நிலையில், இம்மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
-
மகளிர் ஐ.பி.எல்.லில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி.
18 Mar 2024புதுடெல்லி : மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
அணியுடன் இணைந்தார் கோலி
18 Mar 20242024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.