எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில், சிறப்பு நிபுணர் குழு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள், தேர்தல் ஆணையர்கள் என நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்களின் செல்பேசிகள், பெகாசஸ் என்ற மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்கக்கோரி வழக்கறிஞர் சர்மா, மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் உள்ளிட்ட பலரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நேற்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு இடைக்கால தீர்ப்பினை வழங்கியது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சம்பந்தமான விஷயத்தை ஆய்வு செய்வதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இது அரசியலமைப்பு வழங்கி இருக்கக்கூடிய அடிப்படையான விஷயங்கள் குறித்த விவகாரம். எனவே, இதில் அரசியல் சார்ந்தது இல்லாமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான விஷயங்களை ஆராய உள்ளோம் என்று தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் மனு தாக்கல் செய்தவர்கள் நிறைய பேர் நேரடியாக உளவு பார்க்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள். இந்தியாவில் தனியுரிமையைப் பாதுகாப்பது என்பது மிகவும் அவசியம். எனவே, இந்த விவகாரத்தில் தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்துவது மத்திய அரசின் தலையாய கடமை என மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கிய தலைமை நீதிபதி, 'நாம் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்கிறோம். வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தனிமனித உரிமைகளும் முக்கியம்.
பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல, அனைத்து குடிமக்களின் தனிநபர் ரகசியங்கள் காக்கப்பட வேண்டும். விரிவான தகவல்களை கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கியிருந்தோம். இருப்பினும், அவர்கள் அதனை செய்யவில்லை. அதனைச் செய்திருந்தார்கள் என்றால், எங்கள் பணி குறைவாக இருந்திருக்கும். தற்பொழுது அந்தப் பொறுப்பு எங்களிடம் வந்திருக்கிறது என்று தீர்ப்பில் குறிப்பிட்டார்.
தேசியப் பாதுகாப்பு என்ற விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வரும் மத்திய அரசுக்கு அனைத்திலும் விலக்கு அளிக்க முடியாது. நீதித்துறை மறு ஆய்வுக்கு எதிராக தேசியப் பாதுகாப்பைக் காரணம் கூறி சாதாரணமாகத் தடை விதிக்க முடியாது. இங்கு மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்க வேண்டும், நீதிமன்றத்தை வாய்மூடிப் பார்வையாளனாக ஆக்கிவிடக் கூடாது.
தனியுரிமைக்கான கட்டுப்பாடு என்பது அவசியம்தான். ஆனால், அது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு செய்யப்பட வேண்டும். உலகில் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக தனியுரிமை கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், அது இறுதியாக செய்யப்பட வேண்டிய விஷயம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் அழுத்தமாகக் கூறினார்.
கண்காணிப்பு என்ற பெயரில் செய்யப்படக்கூடிய கட்டுப்பாடுகள் தனியுரிமையை பாதிக்கக் கூடியது என்பதை மறுப்பதற்கில்லை. அதுவும் பத்திரிகைகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படும்போது, அவை இத்தகைய தொழில்நுட்பங்களால் பாதிக்கப்படக் கூடியதாக அமைந்துவிடும். மத்திய அரசின் தெளிவான நிலைப்பாடு இல்லாததால், இந்தியர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பது கவலை தருவதாக உள்ளது என பல முக்கியமான கருத்துகளையும் அவர் கூறினார்.
பின்னர் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மறுப்பு எதையும் தெளிவாக தெரிவிக்காததால், மத்திய அரசு அமைத்தக் குழுவை அங்கீகரிக்க மறுப்பதாகவும், தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக இயங்கும் குழு அமைக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை தாங்கள் ஏற்பதாகவும், அதனடிப்படையில உண்மையைக் கண்டறிய குழு அமைக்கப்படுவதாக கூறிய தலைமை நீதிபதி, தனியுரிமை மீறல் நடந்துள்ளதா என்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும் என்று தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர்.வி.ரவீந்தரன் தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்படுவதாகவும், இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி மற்றும் சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்தின் தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் சுதீப் ஓப்ராய் ஆகியோரும் குழுவில் இடம்பெறுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இந்தக் குழுவிற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை மேற்கொள்ள, குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் பல்கலைக்கழகத்தின் சைபர் செக்யூரிட்டி பிரிவின் தலைவராக உள்ள டாக்டர் நவீன் குமார் சவுத்ரி, கேரளாவில் உள்ள அமிர்தா விசுவ வித்யாபீடம் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் பிரபாகரன் மற்றும் மும்பையில் உள்ள ஐஐடி நிறுவனத்தின் கணிப்பொறி அறிவியல் பிரிவின் பேராசிரியர் அஷ்வின் அணில் குமஸ்தே ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு அடுத்த 8 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுவானது, குற்றச்சாட்டுகளில் வருவதுபோல உளவு பார்க்கப்பட்டதா? என்ன காரணத்திற்காக உளவு பார்க்கப்பட்டது? சர்வதேச நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்களா? மத்திய அரசுக்கு உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தெரியுமா? மத்திய அரசுதான் உளவு பார்த்ததா? இப்படியாக முன்வைக்கப்பட்ட முக்கியமான கேள்விகள் தொடர்பான விரிவான விசாரணையை மேற்கொள்ளவுள்ளது குறி்ப்பிடத்தக்கது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
இதனிடையே சுப்ரீம் கோர்ட் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது, வரவேற்கிறேன் என்று மனுதாரரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.