முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப்போரில் தமிழகம்: சென்னையில் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் சிவகுமார்

சனிக்கிழமை, 6 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை நடிகர் சிவகுமார் நேற்று பார்வையிட்டார்.

நடிகர் சிவகுமாருக்கு கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன் விளக்கிக் கூறினார். தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குநர் சங்கர சரவணன் உடன் இருந்தார்.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்களை ஒட்டி தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை தமிழக முதல்வர் நவம்பர் 1-ம் தேதி திறந்து வைத்தார். 

கடந்த  1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  வரும் 14-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் என அனைவரும் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து