முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரிய மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், தேர்வுகள் பட்டியலிடப்பட்டு விட்ட நிலையில் சில மாணவர்களுக்காக மாற்ற முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ மாணவர்கள் 6 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என்ற முறைக்கு பதிலாக, விருப்பம் இருப்பவர்கள் மட்டும் நேரடியாக வந்து எழுதலாம் மற்றவர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தற்பொழுது தேர்வுகள் நடைபெற்று வருகிறது, இந்த நேரத்தில் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை எழுத எப்படி அனுமதிக்க முடியும். ஏற்கனவே தேர்வுகள் பட்டியலிடப்பட்டு விட்ட நிலையில் சில மாணவர்களுக்காக அதனை மாற்ற முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறினார். 

மேலும் கல்வி தொடர்பான விவகாரங்களில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் இதற்காக உள்ள அதிகாரிகள் நிலைமையின் தன்மையை உணர்ந்து பணிபுரிவார்கள் எனவும் நீதிபதிகள் கூறினர். கொரோனா விதிமுறைகள் முறையாக செயல்படுத்தப்படுகிறது என்ற மத்திய அரசின் வாதங்களை ஏற்று மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து