முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு நலனைத்தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை: அமித்ஷா

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் அறிவிப்பு, வரவேற்கத்தக்க அரசியல் நகர்வு. பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டதை போல, இந்திய அரசு எப்போதும் விவசாயிகளுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கும் ஆதரவாகவும் துணை நிற்கும்.  பிரதமர் இந்த அறிவிப்பை ‘குரு புராப்’ தினத்தில் வழங்கியிருப்பதை கூடுதல் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது.

பிரதமரின் இந்த அறிவிப்பு, ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த அறிவிப்பு மூலம் தனது மிகச்சிறந்த அரசியற்திறனை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர். இவ்வாறு அதில் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து