முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் என்கவுண்ட்டரில் பயங்கரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது,  அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி, பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் உள்ளனரா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து