எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 517 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், 39 துணை மின் நிலையங்களில் 712 எம்.வி.ஏ. அளவிற்குத் திறன் அதிகரிக்க 141 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 40 எண்ணிக்கையிலான திறன் மின்மாற்றிகளின் செயல்பாட்டினையும் அவர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் எவ்வித தடையுமின்றி மின்சாரம் கிடைக்கச் செய்யும் நோக்குடன், அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்றவாறு தற்போது உள்ள மின்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டும், தரம் உயர்த்தப்பட்டும் மின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டும் வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின் பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, தேவைப்படுகின்ற உச்சபட்ச மின்தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சரியான மின் அழுத்தத்துடன் கூடிய சீரான மின்சாரத்தை வழங்கிடவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதல் துணை மின் நிலையம் அமைப்பது சீரான மின் விநியோகத்திற்கு அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைகேற்ப புதிய மற்றும் தரம் உயர்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைத்தல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் / மின்மாற்றிகளின் திறன் அதிகரித்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துவாக்குடி, சென்னை மாவட்டம் – மாம்பலம் (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்), திருப்பத்தூர் மாவட்டம் – திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 357 கோடியே 98 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 230 கி.வோ துணை மின் நிலையங்கள்,
சென்னை மாவட்டம் – புளியந்தோப்பு (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்), செங்கல்பட்டு மாவட்டம் – நல்லம்பாக்கம் (விகிதாசார அறிமுகம்), கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஈருடையாம்பட்டு, தூத்துக்குடி மாவட்டம்- சன்னதுபுதுக்குடி (விகிதாசார அறிமுகம்), திருவண்ணாமலை மாவட்டம் – வெம்பாக்கம் (விகிதாசார அறிமுகம்), திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மேட்டுப்பட்டி (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்) மற்றும் வேங்கைமண்டலம் (விகிதாசார அறிமுகம்) ஆகிய இடங்களில் 84 கோடியே 76 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏழு 110 கி.வோ துணை மின் நிலையங்கள்,
செங்கல்பட்டு மாவட்டம் – வேதாச்சல நகர் (வெளிப்புற ஆளில்லா துணை மின் நிலையத்தை உட்புற ஆளுள்ள துணை மின் நிலையமாக மாற்றுதல்), காஞ்சிபுரம் மாவட்டம் – காவனூர் (உட்புற துணை மின் நிலையம்), திருமுடிவாக்கம் (உட்புற துணை மின் நிலையம்), கிருஷ்ணகிரி மாவட்டம் –மரிக்கம்பள்ளி, ராணிப்பேட்டை மாவட்டம் – அரக்கோணம் (ஆளில்லா துணை மின் நிலையத்தை ஆளுள்ள துணை மின் நிலையமாக மாற்றுதல்), சேலம் மாவட்டம் – பூமனூர், தஞ்சாவூர் மாவட்டம் – திருநீலக்குடி, திருவள்ளூர் மாவட்டம் – அடையாளம்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் – அரட்டவாடி, பெரம்பலூர் மாவட்டம் – கூடலூர் ஆகிய இடங்களில் 74 கோடியே, 62 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பத்து 33 கி.வோ துணை மின் நிலையங்கள் என மொத்தம் 517 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்களை தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், அரியலூர் மாவட்டம் - அரியலூர், செங்கல்பட்டு மாவட்டம் – இராமாபுரம், சென்னை மாவட்டம் – அன்னை நகர் மற்றும் கிண்டி, கடலூர் மாவட்டம் – சித்தரசூர் மற்றும் பி.முட்லூர், திண்டுக்கல் மாவட்டம் – கள்ளிமந்தையம் மற்றும் வத்தலக்குண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் – பழையசீவரம், வையாவூர், முசரவாக்கம், குன்னவாக்கம், பூணிமாங்காடு, சிறுசேரி, திருமுடிவாக்கம் மற்றும் தாமல், கள்ளக்குறிச்சி மாவட்டம் – கள்ளக்குறிச்சி மற்றும் காரணைபெருச்சானூர், கன்னியாகுமரி மாவட்டம் – கருங்கல், கரூர் மாவட்டம் – வேப்பம்பாளையம் மற்றும் பஞ்சப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் – சூசூவாடி மற்றும் குருபரப்பள்ளி, இராமநாதபுரம் மாவட்டம் – கமுதி, சேலம் மாவட்டம் – கே.ஆர். தோப்பூர், தேனி மாவட்டம் – வண்ணாத்திப்பாறை, திருவாரூர் மாவட்டம் – பேரளம், கப்பல் நகர், உள்ளிக்கோட்டை மற்றும் மன்னார்குடி, திருவள்ளூர் மாவட்டம் – திருமழிசை, திருவள்ளூர் மற்றும் பண்டி காவனூர், திருநெல்வேலி மாவட்டம் – மேலப்பாளையம், திருப்பூர் மாவட்டம் – கருவலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – குணசீலம், தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம், விழுப்புரம் மாவட்டம் – திருப்பாச்சனூர், விருதுநகர் மாவட்டம் – காரியாப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 39 துணை மின் நிலையங்களில் 712 எம்.வி.ஏ. அளவிற்கு திறன் அதிகரிக்க 141 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 40 எண்ணிக்கையிலான திறன் மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
மேற்கண்ட 659 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மின்திட்டங்கள் மூலம் பகுதி வாழ் மக்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய பெருமக்களுக்கு தரமான, தடையில்லா மின்சாரம் வழங்க வழிவகை ஏற்படும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.