முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதி திராவிட பள்ளிகளில் வகுப்பறை கட்டுமான பணிகளை மேற்கொள்ள ரூ. 2109.16 லட்சம் ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

ஆதி திராவிட பள்ளிகளில் வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ரூ. 2109.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

கடந்த 08.09.2021 அன்று தமிழக சட்டசபையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 318 உண்டி உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 14 தொடக்கப் பள்ளிகள், 11 நடுநிலைப் பள்ளிகள், 5 உயர்நிலைப் பள்ளிகள், 9 மேல்நிலைப் பள்ளிகள் மொத்தம் 39 உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.15 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகளும், 45 உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.6.13 கோடி செலவில் சுற்றுச்சுவர்களும் மொத்தம் ரூ.21.13 கோடி செலவில் கட்டப்படும் என்று அறிவித்தார்.  

இவ்வறிவிப்பிற்கிணங்க, பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 39 உண்டி உறைவிடப் பள்ளிகளில் 65 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 1495.00 லட்சம் (பதினான்கு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம்) மற்றும் 34 உண்டி உறைவிட பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ. 614.16 லட்சம் (ரூபாய் ஆறு கோடியே பதினான்கு லட்சத்து பதினாறாயிரம் மட்டும்) ஆக மொத்தம்  ரூ. 2109.16 லட்சம் (ரூபாய் இருபத்தொரு கோடியே ஒன்பது லட்சத்து பதினாறாயிரம் மட்டும்) செலவில் வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை  மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்து  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து