முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் புதிதாக 8,895 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,895 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:-

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,04,18,707 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, நேற்று காலை 7 மணி நிலவரப்படி 127.61 கோடியை (1,27,61,83,065) கடந்தது. 1,32,44,514 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6,918 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,40,60,774ஆக அதிகரித்துள்ளது.  இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.35 சதவீதமாக உள்ளது.  மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொரோனா  பாதிப்பு தொடர்ந்து 161 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,895 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 99,155 ஆக உள்ளது. நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.29 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவாகும்.  கடந்த 24 மணி நேரத்தில் 12,26,064 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 64.72 கோடி கோவிட் பரிசோதனைகள் (64,72,52,850) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 21 நாட்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.80 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.73 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 62 நாட்களாக 2 சதவீதத்திற்குக் கீழே 97 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து