முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய மாநிலத்தில் கூடுதலாக 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புனே : மராட்டியத்தில் கூடுதலாக 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில், உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ம் தேதி கண்டறியப்பட்டது.  இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா உஷாரானது. இந்த தொற்றை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகள் வந்திறங்குவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும்,  இந்தியாவில் நேற்று 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவில் கர்நாடகாவில் இருவருக்கும், குஜாரத், மராட்டியத்தில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நபர் தான்சானியாவில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார். 

இந்தியாவில் ஒமைக்ரான்  பரவலால் கொரோனாவின் அடுத்த அலை ஏற்படுமா? என்பது குறித்து தெளிவாக தெரியவர இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில், மராட்டியத்தில் கூடுதலாக 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால், மராட்டியத்தில் மொத்தம் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து