முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 தவணை தடுப்பூசி செலுத்தியவருக்கு மட்டுமே மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை முதல் அனுமதி

சனிக்கிழமை, 11 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே அனுமதி என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா நோய் 3-வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே நாளை 13-ம் தேதி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். திருக்கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கீழ்கண்ட ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே கண்டிப்பாக திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி  கோவிட் தடுப்பூசி சான்றிதழ் நகல் வைத்திருப்பது,  கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ்,  பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறுந்தகவல் வைத்திருப்பது, வாட்ஸ் அப்  செயலி மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்,  கைபேசி எண் மூலமாக கோவின் இணையதளத்தில் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து