முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் திருப்பாவை பாராயணம் நாளை முதல் தொடக்கம்

புதன்கிழமை, 15 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை நடைபெறும். கோவிலில் ஒரு மாத காலம் திருப்பாவை பாராயணம் பாடப்படும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் முக்கிய விழாக்களில் ஒன்றான தனுர்மாத விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் மதியம் 12.26 மணிக்கு தொடங்கும் தனுர் நாழிகையை முன்னிட்டு நாளை (17-ந் தேதி) முதல் நடத்தப்படும் சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை நடைபெறும். தனுர் மாதத்தில் சூரிய உதயத்திற்கு 1½ மணி நேரத்திற்கு முன்பு விஷ்ணுவுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்கின்றனர்.

திருப்பாவை ஆழ்வார் திருமறையின் ஒரு பகுதி. குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் மிகவும் பிரபலம். கோவிலில் ஒரு மாத காலம் திருப்பாவை பாராயணம் பாடப்படும். திருப்பாவை சேவை தனிமையில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து