முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் பக்தர்கள் இன்று முதல் நேரடி நெய் அபிஷேகம் செய்ய அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா பரவல் குறைந்ததால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.  இந்த நிலையில்  சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி வழங்கி உள்ளது.

எருமேலியிலிருந்து பாரம்பரிய பாதையான சபரிமலைக்கு செல்லும் 38 கி.மீ தொலைவு உள்ள பெருவழிபாதையும் இன்று முதல் திறக்கப்படுவதாகவும்  சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை தினமும் 45,000-ல் இருந்து 60,000 ஆக அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து