முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை ; திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு அணையில் இருந்து வரும் 19-ம் தேதி முதல் 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், குடகனாறு அணையிலிருந்து வலது மற்றும் இடது பிரதானக் கால்வாய்களின் மூலம் பாசன நிலங்களுக்கு 19.01.2022 முதல் 18.04.2022 வரை 90 நாட்களுக்கு, 7 நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டும் 7 நாட்கள் அடைத்தும், 264.384 மில்லி கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட  அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 9000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து