எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பும்ராவை மறைமுகமாக சாடும் டேர்ல் ஸ்டெயின்
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ப்ரீ ஹிட் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டுவருவது டெய்லண்டர்கள் பேட்ஸ்மேன்களை குறிவைத்து பந்துவீச்சாளர்கள் நோ-பால் வீசி வெறுப்பேற்றுவது தடுக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவி்த்துள்ளார். மறைமுகமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாள் ஜஸ்பிரித் பும்ராவை கட்டம்கட்டித்தான் டேல் ஸ்டெயின் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக டேல் ஸ்டெயின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரீ ஹிட்டை அறிமுகப்படுத்த வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ஒவருக்கு 7 முதல் 8 பந்துகள் அல்லது சிலநேரங்களில் 9 பந்துகள் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயமாக இது உதவுமா. டெய்லண்டர்கள் பேட்ஸ்மேன்கள் டாப்-கிளாஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் மிரட்டல்விடுக்கும் பந்துவீச்சை கடைசி நேரத்தில் எதிர்கொள்வது சிரமம் அதிலிருந்து ப்ரீ ஹிட் காப்பாற்றும். இதுபற்றி ஸ்வரஸ்யமாக விவாதிக்கலாம். டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாகச் செல்கிறது. பும்ரா “நன்றாகப்பந்துவீசி” 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ” எனத் தெரிவித்துள்ளார்.
____________
ஜோகோவிச் விவகாரம் எதிரொலி: தாமதமான பட்டியல் வெளியீடு
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஒபன் வருகிற திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றார். அவரை மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதுவரை அவருக்கு விசா விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று யார் யாருடன் மோதுவது என்பதை முடிவு செய்யும் வரைவு பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், ஜோகோவிச் விளையாடுவா? விளையாடமாட்டாரா? என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதனால் போட்டி வரைவு பட்டியல் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
______________
கோலி - புஜாராதான் தலைவலி: தெ.ஆப்பிரிக்க வீரர் பீட்டர்சன்
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது. இதனால் 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 9 ரன்னுடனும், விராட் கோலி 14 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர். இந்நிலையில், ஆட்டம் முடிந்ததும் செய்தி நிறுவனத்திடம் பேசிய கீகன் பீட்டர்சன் விராட் கோலியும் புஜாராவும் எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்தார். காலையில் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதே எங்கள் இலக்கு. ஆனால் தற்போது களத்தில் உள்ள விராட் கோலி மற்றும் புஜாராவின் ஆட்டம் கடந்த சில போட்டிகளில் எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி விட்டன என தெரிவித்தார்.
_____________
கேட்சில் சதமடித்தார் கேப்டன் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் பவுமாவை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் விராட் கோலி. இது அவரது 100-வது கேட்ச் சாதனை ஆகும். விராட் கோலி 99 டெஸ்டில் 168 இன்னிங்சில் 100 கேட்ச் பிடித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 100 கேட்ச் பிடித்த 6-வது வீரர் விராட் கோலி ஆவார். ராகுல் டிராவிட் 163 டெஸ்டில் 299 இன்னிங்சில் (1996 முதல் 2012 வரை) 209 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார். வி.வி.எஸ். லட்சுமண் (135), தெண்டுல்கர் (115), கவாஸ்கர் (108), அசாருதீன் (105) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
___________
‘புஷ்பா’ படம் அல்லு அர்ஜூன் கெட்டப்பில் ரவீந்திர ஜடேஜா
தனது இன்ஸ்டாகிராமில் ரவீந்திர ஜடேஜா புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த டிசம்பர் 17-ம் தேதி, தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வரவேற்பைப்பெற்ற திரைப்படம் 'புஷ்பா: தி ரைஸ்'. தெலுங்கு உட்பட பல மொழிகளில் வெளியான இந்தப்படம் வசூல் சாதனைப் படைத்து வருகிறது. குறிப்பாக, அல்லு அர்ஜூனின் தாடி மீசையுடன் சற்று வித்தியாசமான கெட்டப் மற்றும் சாமி பாடலில் ராஷ்மிகா மந்தனாவின் நடனம் ஆகிய இரண்டும் வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த கெட்டப் கொண்ட தத்ரூபமான புகைப்படத்தை, ரவீந்திர ஜடேஜா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தை பதிவிட்டு பின்குறிப்பாக, “நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை என்றைக்குமே ஆதரித்ததில்லை. இப்படத்தில் நான் புகைப்பிடிக்கும் பீடி கிராபிக்ஸால் உருவாக்கப்பட்டது. புகையிலைப் பொருட்களை உட்கொள்வது மற்றும் பிடிப்பது உடல்நலத்திற்கு கேடானது” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ‘புஷ்பா’ பட வசனத்தை அல்லு அர்ஜூன் பாணியில் பேசும் வீடியோவை பகிர்ந்தநிலையில், தற்போது ரவீந்திர ஜடேஜாவின் இந்தப்புகைப்படம், சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.