எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மதுரை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிட வலியுறுத்தி 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சு. வெங்கடேசன் எம்.பி. அளித்தார்.
அந்த மனுவில், மதுரை மாவட்டத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். மேலூர் பகுதி தொழிற்பேட்டைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மதுரைக்கான மாஸ்டர் பிளானில் புதிய தொழிற்சாலைகளுக்கு 10 சதவிகித இடங்களை வகைப்படுத்த வேண்டும். மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழித் திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்த தனி ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும். மதுரையில் புதிய நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப பூங்காவினை உருவாக்க வேண்டும்.
மதுரையில் ஜவுளிக்கென தனியாக வாரச் சந்தையினை உருவாக்க வேண்டும். சுங்கடிச் சேலைகளுக்கான சிறப்பு சந்தையினை ஏற்படுத்த வேண்டும். உயிரியல் துறையில் சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க காமராசர் பல்கலைக் கழகத்தில் டைசல் பூங்காவினை உருவாக்க வேண்டும். மதுரையின் மையத்தின் இருக்கும் மத்திய சிறைச்சாலையினை உடனடியாக புறநகர் பகுதிக்கு மாற்றிட வேண்டும். சிந்து முதல் வைகை வரை செழித்தோங்கிய தமிழர் நாகரிகத்திற்கான உலகத் தரத்திலான அருங்காட்சியகத்தினை தற்போது மதுரை மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் அமைத்திட வேண்டும். அதற்கு உலக அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்.
பாத்திமா கல்லூரி முதல் கன்னியாகுமரி நெடுஞ்சாலை சந்திப்பு வரை வைகையின் வடக்கு நதிக்கரை சாலையை விரிவுபடுத்த வேண்டும். காளவாசலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் மேலக்கால் சாலையை விரிவுபடுத்த வேண்டும். விரகனூர் சந்திப்பு , மண்டேலாநகர் சந்திப்பு, மேலமடை, அரசு ராஜாஜி மருத்துவமனை, மாட்டுத்தாவணி , தெற்குவாசல், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்களை அமைக்க வேண்டும். பழுதான நிலையில் உள்ள மேயர் முத்து பாலத்தை சீரமைக்க வேண்டும். பழங்காநத்தம் வஉசி பாலத்தினை விரிவுபடுத்தி புதுப்பிக்க வேண்டும்.
மதுரை மாவட்ட விரைவு போக்குவரத்து ஏற்பாட்டிற்கு மதுரை மெட்ரோவிற்கான சாத்தியக்கூறு விரைந்து செய்யப்பட வேண்டும். வைகை நதியினை பாதுகாக்க ஐந்து மாவட்ட நிர்வாக தலையீடுகளை மாற்றி ஒற்றை நிர்வாக அலகின் கீழ் கொண்டு வருகிற புதிய வைகை நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். வைகை உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பது கழிவுநீர் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
மதுரை மாநகரின் சாலைகளை சீரமைக்க உடனடியாக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும். அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அதிநவீன கலை அரங்கம் உருவாக்கப்பட வேண்டும். உலகத் தமிழ் சங்கத்தினை சீரமைத்து அனைத்து தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் பயன்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மதுரையில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை உருவாக்க வேண்டும். கொட்டாம்பட்டியில் புதிய அரசு ஐ.டி.ஐ உருவாக்க வேண்டும். மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் காமராசர் பல்கலைக்கழக கல்லூரியினை அரசுக் கல்லூரியாக மாற்றிட வேண்டும். மதுரை விமான நிலைய விரிவாக்க சுரங்கப்பாதை, மதுரை நகரத்தின் புதிய உள்வட்டச்சாலை , வெளிவட்டச்சாலை உள்ளிட்ட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையை இயக்கிடவும், அதற்கான பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கிடவும் வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக சாத்தையாறு அணையில் பெரியார் பிரதான கால்வாய் மூலம் நீரை தேக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வினை துவக்க வேண்டும். மேலூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடம் கட்ட 50 கோடி ரூபாய் ஒதுக்கிட வேண்டும். மதுரையின் பசுமைப் போர்வையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து , ஏற்கெனவே உள்ள காடுகளை பாதுகாக்க சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்; மாவட்டத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் அதன் முழுக் கொள்ளளவிற்கு தூர்வாரிட வேண்டும்.
வைகையின் பிறப்பிடமான மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதுரையின் சுற்றுச்சூழலை மீட்டுருவாக்கம் செய்து காற்று மாசுபடுதலை குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மதுரை எய்ம்ஸ், மதுரை நைபர், மதுரை சர்வதேச விமான நிலைய கோரிக்கைகளில் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.