முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்களுக்கு அனுமதி இல்லை: திருப்பதியில் ரத சப்தமி விழா : வருகிற 8-ம் தேதி நடக்கிறது

புதன்கிழமை, 2 பெப்ரவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா 8-ந்தேதி நடக்கிறது. அன்று கோவிலின் நான்கு மாட வீதிகளில் வாகனச் சேவை நடக்காது, என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரிய ஜெயந்தியையொட்டி ரத சப்தமி விழா வருகிற 8-ந்தேதி நடக்கிறது. அன்று ஒரேநாளில் காலையில் இருந்து இரவு வரை 7 வாகனச் சேவை நடக்கிறது. முதல் வாகனச் சேவையாக காலை 6 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகனச் சேவை நடக்கிறது. 

அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகனச் சேவை, காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகனச் சேவை, மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகனச் சேவை, மதியம் 2 மணியில் மாலை 3 மணி வரை கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படும். தொட்டியில் சக்கர ஸ்தானம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கல்ப விருட்ச வாகனச் சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகனச் சேவை, இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகனச் சேவை நடக்கிறது.

ரத சப்தமி விழாவையொட்டி அன்று கோவிலில் நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுவதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடனும், மலையப்பசாமி தனித்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அனைத்து வாகனச் சேவைகளும் கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. கோவிலுக்கு வெளியே நான்கு மாடவீதிகளில் உலா வராது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து