முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணம் வேண்டாம்: அண்ணன் சிவாஜிக்காக பாடுகிறேன் : லதா மங்கேஷ்கர் கூறியது குறித்து நடிகர் பிரபு நெகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : என் மூத்த அண்ணன் சிவாஜி கணேசனுக்காகப் பாடுகிறேன் என்று பணம் கூட வாங்காமல் தமிழில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடல் பற்றி சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார் பிரபு.

ஆனந்த் என்ற திரைப்படத்தில் ஆராரோ ஆராரோ.. நீ வேறோ நான் வேறோ என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருப்பார்.  அந்தப் பாடல் பற்றி சில சுவாரஸ்ய தகவலை நடிகர் பிரபு பகிர்ந்துள்ளார்.

எனது அண்ணன் ராம்குமார்தான் ஆனந்த் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியே ஆக வேண்டுமென்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். லதா மங்கேஷ்கர் எங்கள் அழைப்பை ஏற்றுவது அந்த பாடலைப் பாடிச் சென்றார். அப்பாடலைப் பாடியதற்காக அவர் சம்பளம் வேண்டாம் என்று சொல்லி விட்டார். என் மூத்த அண்ணன் சிவாஜி கணேசனுக்காக பாடுகிறேன் என்று கூறி அப்பாடலை அவர் பாடிச் சென்றார். லதா மங்கேஷ்கரும் அவரது சகோதரிகளும் என் தந்தையின் தீவிர ரசிகைகள். அவர்கள் என் தந்தையை அண்ணா என்றே அன்புடன் அழைத்தனர்.

இந்த பந்தம் 1960-ல் உருவானது. அப்பாவின் ஒரு படத்தை பார்த்து விட்டு லதா மங்கேஷ்கர் சென்னை வந்தார். அன்று தொடங்கியது அப்பாவுக்கும் லதா சகோதரிகளுக்குமான பந்தம். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகினோம். எங்களின் அன்னை இல்ல வளாகத்தினுள் ஒரு சிறிய பங்களா இருக்கிறது. சென்னை வரும் போது லதா மங்கேஷ்கர் தங்கிச் செல்வதற்காகவே அதைக் கட்டினார்கள். அப்பா இரண்டே மாதங்களில் அதைக் கட்டச் செய்தார். லதா மங்கேஷ்கருக்கு ஓட்டல் உணவு பிடிக்காது. ஆகையால் அம்மாவே அவருக்கு சமைத்துக் கொடுப்பார். லதாவும் பதிலுக்கு தீபாவளி, விழாக்காலங்களில் எங்கள் அனைவருக்கும் துணிகளும், பரிசுகளும் அனுப்புவார். கடந்த தீபாவளி வரை இந்த வழக்கம் நடைமுறையில் இருந்தது என்று பிரபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து