முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை !

சனிக்கிழமை, 5 மார்ச் 2022      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,760-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்த படியே இருந்து வருகிறது. கடந்த 24-ம் தேதி உக்ரைன்- ரஷ்யா இடையே போர் தொடங்கிய போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்று ஒரு பவுன் ரூ. 40 ஆயிரத்தை நெருங்கியது. அதன்பின் 2 நாட்கள் விலை குறைந்து ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. மறுநாள் தங்கம் விலை மீண்டும் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பின் கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ. 38 ஆயிரத்து 984-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை நெருங்கியது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 776 உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 760-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ. 4 ஆயிரத்து 970 ஆக உள்ளது. 

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 900 அதிகரித்து ரூ. 73 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.40க்கு விற்பனையானது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து