முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் ஏற்றுக் கொள்வேன் : நடிகர் பாக்யராஜ் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்த முடிவுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்று நடிகர் பாக்யராஜ் கூறினார்.

உலக சிறுநீரக தினத்தையொட்டி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபயண விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் பாக்யராஜ் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம்  நடிகர் பாக்யராஜ் கூறியதாவது, 

நடிகர் சங்க தேர்தல் ஓட்டுகள் எண்ணிக்கை வருகிற 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்டு நியாயமான முறையில் எந்த முடிவுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். அதற்கு தயாராக உள்ளேன். குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து