முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் பங்குனி திருவிழா: பம்பையில் ஐயப்பனுக்கு நடந்த ஆராட்டு நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலையில் பங்குனி திருவிழாவையொட்டி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மறுநாள் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆராட்டு விழா நேற் பகல் 11.30 மணிக்கு நடந்தது. இதற்காக பம்பை நதியில் அமைக்கப்பட்டிருந்த குளத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடந்தது. இதனை காண அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.  தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். இன்று 19-ம் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.

தற்போது முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசன வசதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து