முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் கஷ்டப் படக்கூடாது - இளையராஜா

சனிக்கிழமை, 26 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

கணேசன் இயக்கத்தில், புதுமுகங்கள் சுபாஷ் சந்திரபோஸ் நேஹா ஜோடியாக நடிக்கும் படம் காதல் செய். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடைபெற்றது. விழாவில் இளையராஜா, பாரதிராஜா, பி.வாசு உள்படோர் கலந்துகொண்டனர். விழாவில் இளையராஜா பேசுகையில், இந்த உலகத்தில் ஒரே ஒரு பாரதிராஜாதான். ஒரே ஒரு இளையராஜாதான் இருக்க முடியும். ஒரே ஒரு சூரியன் மாதிரி இன்னொரு சூரியன் உலகத்துல வர முடியுமா? அது என்ன தென்ன மரமா, ஆயிரம் வைக்கறதுக்கு… ஒரு மரத்துல இருந்து இன்னொரு மரம் பொறக்கறதுக்கு… பொறந்து வளரணும்யா என்று சிரித்துக்கொண்டே சொன்னார். திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ங்கற குறள் மாதிரிதான். செல்வம் படைச்சவனா இருக்கறது வேறு. தெளிந்த அறிவோடு இருப்பது வேறு. திருவேறுனா இன்னொரு அர்த்தமும் இருக்கு. நீ தெய்வமாகக்கூட இருக்கலாம், ஆனா, தெள்ளியராக இருப்பது ரொம்ப கஷ்டம் என்றார்.  மேலும், இந்தப் படத்தை எடுக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டதாகச் சொன்னார்கள். ஒரு படத்தை எடுக்க எவ்வளவு வேணாலும் கஷ்டப்படலாம். படத்தைப் பார்க்கிற மக்கள் கஷ்டப் படக்கூடாது. ‘காதல் செய்’னு டைட்டில் வச்சிட்டீங்க. காதல் செய்ய பார்க்கிறேன். என்னை விட நிறைய காதல் செய்கிறவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனா, எதைக் காதலிக்கணும் என்பதுல நான் ரொம்ப தெள்ளியனா இருக்கிறேன் என்று கலகலப்பாக பேசி முடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து