முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை விஷு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Sabarimala 2022 01 19

Source: provided

திருவனந்தபுரம் : சித்திரை விஷு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. 

மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து மூலவருக்கு விளக்கேற்றினார். அதை தொடர்ந்து 18-ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார். இதையடுத்து வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லாததால், இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. 

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் துவங்கும். வரும் 15-ம் தேதி விஷு கனி தரிசனம் நடக்கிறது. அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும், பக்தர்கள் காய், கனி அலங்காரத்தில் அய்யப்பனை தரிசிக்க முடியும்.

வரும் 18-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு வாயிலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து