முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மது பழக்கத்தால் அவமானப்பட்ட முத்துக்காளை

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2022      சினிமா
Sukumar-Preethi 2022 04 18

Source: provided

கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இப்படத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாகவும் நாயகியாக பிரீத்தியும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்  நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், கலைப்புலி ஜி.சேகரன், கஸாலி, நடிகர்கள் முத்துக்காளை, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள். விழாவில் பேசிய நடிகர் முத்துக்காளை, ’தொடாதே’ படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கும் என் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதுவை தொட்டால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி சீரழியும் என்பதற்கு நானே ஒரு உதாரணம். சென்னைக்கு நான் வந்ததே, ஸ்டண்ட் கலைஞனாக வேண்டும் என்பதற்காக தான். ஆனால், அந்த ஸ்டண்ட் யூனியன் விழா ஒன்றில் என்னால் சரியாக செயல்பட முடிவில்லை. அதற்கு காரணம் மது. அந்த மதுவால் அப்போது அங்கு அவமானப்பட்டேன். அதனால், இனி அந்த மதுவை தொட கூடாது என்று முடிவு செய்தேன். ஐந்து வருடங்களாக நான் மது குடிப்பதில்லை. இன்று என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. நடிப்பதோடு, படிக்கவும் செய்கிறேன். இதுபோன்ற விழிப்புணர்வு படங்கள் நிறைய வர வேண்டும். இப்படி ஒரு படத்தை இயக்கிய அல்கெஸ், படத்தை தயாரித்த எஸ்.ஜெயக்குமார் மற்றும் காதல் சுகுமார் ஆகியோரை வாழ்த்துகிறேன்.” என்றார் மகிழ்ச்சியாக.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து