முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளின் பெயருக்கு பின்னால் தந்தை, தாய் பெயரை சேர்க்க வேண்டும் இத்தாலி அரசியல் சாசன கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2022      உலகம்
childeren022-04-29

Source: provided

ரோம் : இத்தாலி நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயர் தானாக ஒட்டிக்கொள்ளும். இது தொடர்பான ஒரு வழக்கை அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு விசாரித்து, அங்கு பிறக்கிற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் இனி தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்க்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுவரை தந்தையின் பெயரை மட்டுமே தனது பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருந்தது, பாகுபாடு மற்றும் அடையாளத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தாய், தந்தை இருவரும் ஒப்புக்கொண்டால், யாராவது ஒருவரது பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருக்கலாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

  இந்த அரசியல் சாசன கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப, இத்தாலி நாடாளுமன்றம் இப்போது ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும். கோர்ட்டு தீர்ப்பை அரசு முழுமையாக ஆதரிப்பதாக, இத்தாலி குடும்ப அமைச்சர் எலினா பொனெட்டி பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து