முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் கைப்பற்றிய பகுதியில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் : ரஷ்யா அதிரடி அறிவிப்பு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      உலகம்
Russia 2022-04-30

Source: provided

மாஸ்கோ : உக்ரைனில் கைப்பற்றப்பட்ட பகுதியில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகப்படுத்தப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நேற்று 66-வது நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதே வேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதற்கிடையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, ஹார்சன், டான்பாஸ்க் உள்ளிட்ட பகுதிகள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்நிலையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஹார்சன் மாகாணத்தில் ரூபிள் பணம் அதிகாரப்பூர்வ பணமாக அறிமுகப்படுத்தப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து